வவுனியா வளாகம் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்)
வவுனியா வளாகத்துக்கு நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் அதிகம் உள்வாங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தாலும் அவை மிகக் குறைந்தளவாகவே இருக்கின்றன. அதிகபட்சமாக 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு அதிகபட்சமாக முகாமைத்துவ கற்ககைகளுக்கு 15 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். திட்ட முகாமைத்துவ கற்கைக்கு 10 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஏனைய பிரிவுகளுக்கு மிகக் குறைந்த மாணவர்களே அனுமதி பெற்றுள்ளனர். (அட்டவணை 01)
2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 398 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் 67 பேர் மாத்திரமே தமிழர்களாவர். ஏனையோர் சிங்களவர்களாவர்.
இயற்பியல் விஞ்ஞான பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 48 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் நால்வர் மாத்திரமே தமிழர்களாவர்.
உயிரியல் விஞ்ஞான பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 46 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் ஆறு பேர் மாத்திரமே தமிழர்களாவர்.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 53 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் இருவர் மாத்திரமே தமிழர்களாவர்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவுக்கு 2015 - 2019 வரையான நான்கு கல்வியாண்டுகளுக்கு கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 94 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ள போதும் அவர்களில் 11 பேர் மாத்திரமே தமிழர்களாவர்.